CDB இன் தங்கக் கடன் சேவையிலிருந்து மற்றுமொரு புதிய புரட்சி

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் பரிபூரணமான மற்றும் வினைத்திறனான நிதிச் சேவைகளை வழங்குவதுடன், சந்தையில் தனது புதிய CDB தங்கக் கடன் அடகுச் சேவையை மெருகேற்றம் செய்து அறிமுகம் செய்துள்ளது. அதன் பிரகாரம், ‘CDB தங்கக் கடன்’ சேவை வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவையாக, பல புதிய உள்ளம்சங்களுடன் வழங்கப்படுவதுடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

தங்கக் கடன் அடகுச் சேவைப் பிரிவில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், “தங்கக் கடன் வழங்கும் நம்பகமான இடம்” என அழைக்கப்படும் CDB இனால், தங்கக் கடனைப் பெற்றுக் கொண்ட முதல் மாதத்தின் அரை மாத காலப்பகுதிக்கு வட்டி அறவிடாமல், அந்த நிவாரணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது. அதன் பிரகாரம், தங்கக் கடன் அடகுச் சேவையைப் பெற்று முதல் பதினைந்து தினங்களுக்குள் அதனை மீளப் பெறும் வாடிக்கையாளர்களிடமிருந்து வட்டி அறவிடப்படமாட்டாது. அத்துடன், ‘CDB தங்கக் கடன்’ சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, CDB இடமிருந்து அதியுயர் முற்பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பிரகாரம், தங்கப் பவுண் ஒன்றுக்கு ரூ. 165,000 வரை கவர்ச்சிகரமான முற்பணத்தை வழங்க CDB நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும், ‘CDB தங்கக் கடன்’ சேவையிலிருந்து மாதாந்த அடிப்படையில் ஆகக் குறைந்த ஆரம்ப வட்டி வீதம் அறவிடப்படுகின்றது. இது ‘CDB தங்கக் கடன்’ வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், அதிகளவு வினைத்திறனான சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில், CDB கிளை வலையமைப்பானது, வார நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 5.30 மணி வரையும், வார இறுதி சனிக்கிழமை நாட்களில் மு.ப. 8.30 மணி முதல் பி.ப. 2.00 மணி வரையும் திறந்திருக்கும்.

CDB இன் பிரதி பொது முகாமையாளர் பிரசாத் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களின் தேவைகளை CDB ஏற்றுக் கொண்டுள்ளதுடன், எதிர்பார்ப்புகள் நிறைந்த நிதித் தீர்வுகளை வழங்குவதற்காக தொடர்ச்சியாக தன்னை அர்ப்பணித்துள்ளது. CDB தங்கக் கடன் சேவைகளைப் பெற்றுக் கொள்ள விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு உச்ச நம்பிக்கை மற்றும் பாதுகாப்புடனான சேவைகளை வழங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். அவர்களின் பல்வேறு நிதித் தேவைகளுக்கு CDB தங்கக் கடன் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம் என்பதுடன், சிறிய நடுத்தரளவு தொழில் முனைவோர், வியாபாரிகள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதியுயர் முற்பணம் மற்றும் குறைந்த வட்டி வீதங்களுடன், தங்கியிருக்கக்கூடிய சேவை நியமங்கள் போன்றவற்றுடன், “CDB தங்கக் கடன்” சேவை பெருமளவான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.” என்றார்.

‘CDB தங்கக் கடன்’ சேவையை பெற்றுக் கொள்ள CDB கிளைகளுக்கு விஜயம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, மூன்று நிமிடங்கள் எனும் குறுகிய காலப்பகுதியில் தமது சேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இரகசியத்தன்மை மற்றும் உறுதியான சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், தங்கக் கடன் அடகுச் சேவைகளுக்காக விசேட அறையை (VIP அறை) கொண்டுள்ளது. அதன் பிரகாரம், தமது தங்கக் கடன் அடகுச் சேவையை எவ்விதமான அசௌகரியங்களுமின்றி, தமது கொடுக்கல் வாங்கல்களின் இரகசியத்தன்மையை பேணி மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன் சேவைகளுக்கு அர்ப்பணிப்பான வினைத்திறன் வாய்ந்த ஊழியர்களின் சேவைகளை உடனடியாக பெற்றுக் கொள்ளும் வசதி வழங்கப்படுகின்றது. எனவே, பரிசோதனைகளின் போது தங்க நகைகளில் எவ்விதமான சேதங்களும் ஏற்படாத வண்ணம், களஞ்சியப்படுத்தி வைக்கும் போது முழுமையாக பொறுப்பை நிறுவனம் ஏற்று, நட்பான சேவையை வழங்குவதை நிறுவனம் உறுதி செய்கின்றது. இந்தச் சேவை தொடர்பான மேலதிக தகவல்களை https://www.cdb.lk/products/cdb-gold-loans/ எனும் இணையத்தளத்தினூடாகவும், 0117 121111 எனும் இலக்கத்துக்கு மிஸ்ட் கோல் வழங்கியும், சகல CDB கிளைகளிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.